அமெரிக்காவிடமிருந்து 10 நவீன டிரோன்களை இந்தியா வாங்குகிறது.
சமீபத்தில் ஈரான் தளபதி கொல்ல பயன்படுத்திய அமெரிக்காவின் எம்கியூ 9 ரீப்பர் ரக டிரோன்களை வாங்க உள்ளது. ஒபாமா அதிபராக இருந்த போதே இந்த டிரோன்களை வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தலலா ரூ.460 கோடியே 70 லட்சத்தில் 10 டிரோன்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நவீன டிரோன்கள் 50,000 அடி உயரம் வரை இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தது. இந்த டிரோன்களை அமெரிக்காவின் ஜெனரல் அட்டோமிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவைகளால் 27 மணி நேரம் தொடர்ச்சியாக பறக்க முடியும்.