பாக்தாத்:
ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் தளபதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலைய ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்க ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவின்படி தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.