புதுடெல்லி:
நாடுமுழுவதும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு நாளை நடைபெறுகிறது.
மத்திய தேர்வாணயம் நடத்தும் இந்த தேர்வுகள் 72 மையங்களில் நடைபெறுகிறது. இதில் சுமார் 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கான ஹால்டிக்கெட் கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டன. நாளை நடைபெறும் தேர்வுக்கு தேர்வர்கள் தங்களது ஒரிஜினல் அடையாள அட்டை மற்றும் ஹால் டிக்கெட் எடுத்துவருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.