காஷ்மீர் உள்விவகாரம்.. ஐநாவில் இந்திய தூதர் பதில்

காஷ்மீர் உள்விவகாரம்.. ஐநாவில் இந்திய தூதர் பதில்

நியூயார்க்:
காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.
மேலும் காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது.

இதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 9ம் தேதி, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி, சீனாவுக்கு சென்று ஆதரவு கோரினார்.

தங்களது நிலைப்பாட்டுக்கு சீனா ஆதரவு தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, காஷ்மீர் விவகாரம் பற்றி ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் சீனா கோரிக்கை விடுத்தது.

இதன் பின்னர் ஐநா பாதுகாப்பு கவுன்சில் மூடிய அறைக்குள் காஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தியது.

இந்த கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு சீனா மட்டுமே ஆதரவு தெரிவித்தது. இதனால், காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச கவனம் பெற முயன்ற பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த கூட்டத்துக்கு பின்பு ஐநாவுக்கான இந்தியா தூதர் சையது அக்பரூதின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம்.

காஷ்மீரில் அபாயகரமான சூழல் இருப்பதாக சிலர் தங்கள் கருத்தை சர்வதேச நாடுகளின் கருத்தாக எதிரொலிக்கச் செய்வதற்கு முயற்சி செய்து வந்தார்கள் அது தோல்வியில் முடிந்தது.

வருமுன் காப்பதே சிறந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் நாங்கள் கட்டுப்பாடுகள் விதித்தோம்.

ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதத்தை கைவிட்டால் மட்டுமே அமைதி பேச்சுவார்த்தை நடத்த முடியும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்