சிதம்பரம்:
உள்ளாட்சி தேர்தலையொட்டி நடைபெற இருந்த அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
உள்ளாட்சி தேர்தலையொட்டி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிக்கு மாற்றம் செய்து அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.