சென்னை:
நடிகர் விஷாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விஷாலின் தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் பிடித்த டிடிஎஸ் வரி தொகையை முறையாக செலுத்தாத நடிகர் விஷால் மீது வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.