அயோத்திக்கு செல்லும் உத்தவ் தாக்ரே

அயோத்திக்கு செல்லும் உத்தவ் தாக்ரே

மும்பை:

அயோத்திக்கு வரும் 24ம் தேதி செல்லவுள்ளதாக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே, அயோத்தி வழக்கில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நியாயமான தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி என தெரிவித்தார்.

மேலும், இந்த நாளை இந்திய வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய நாள். வரும் 24ம் தேதி அயோத்திக்குச் செல்கிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் சிவசேனா எப்போதுமே தீவிரம் காட்டியிருக்கிறது. பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல வேண்டும். அவர்தான் ராமர் கோவிலுக்காக ரத யாத்திரை நடத்தினார். அவரிடம் ஆசியும் பெற வேண்டும் என தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்