சென்னை:
சென்னையில் காற்று மாசு என பரப்பப்படுவு வெறும் வதந்தி; உண்மையல்ல என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரவித்துள்ளார்.
சென்னை மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், தமிழகத்தில் காற்றின் தரத்தை தொடர்ந்து காண்காணித்து வருமாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 28 இடங்களிலும், சென்னையில் 8 இடங்களிலும் காற்றின் தரத்தை அறியும் நிலையங்கள் உள்ளன.
சென்னையில் காற்று மாசு என பரப்படும் செய்தி வதந்திதான் எனவும், மக்கள் பயப்படவேண்டாம் எனவும், சென்னையில் ஒருசில இடங்களில் தான் புல்புல் புயலால் காற்று மாசடைந்துள்ளது என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.