தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மழை நீடிக்கும்!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மழை நீடிக்கும்!

சென்னை:

தமிழகத்தின் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தற்போது, கோவை, வால்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், ‘‘வெப்பச் சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்