டெல்லி:
இன்று காலையில் இருந்து டுவிட்டர் இணைய தளம் தொழிநுட்ப கோளாறால் செயல் இழந்து உள்ளது.
சமூக ஊடக வலைதளமான டுவிட்டர் தொழிநுட்ப செயலிழப்புடன் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இதனால் லட்சக்கணக்கான உலகளாவிய பயனர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து டுவிட்டர் கூறியதாவது: டுவீட் செய்வதிலும், அறிவிப்புகளைப் பெறுவதிலும் அல்லது டிஎம்களைப் பார்ப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கலாம்.
நாங்கள் தற்போது ஒரு தீர்வை கண்டறிந்து உள்ளோம். விரைவில் இயல்பு நிலைக்கு வரும் என்று ஒரு டுவீட்டில் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.