உருக்கட்டை கொலை; சிக்கிய நடிகை

  • In Cinema
  • December 30, 2019
  • 194 Views
உருக்கட்டை கொலை; சிக்கிய நடிகை

சென்னை:

உறவை துண்டித்ததால், உருட்டுக்கட்டையால் தாக்கி ஒருவர் கொலை செய்ததால், துணை நடிகை உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கொளத்தூர், ராஜமங்கலம் பாரத் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் தேவி. இவர் தொலைக்காட்சி தொடரில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

இவரது வீட்டுக்கு நேற்று இரவு வடபழனியை சேர்ந்த ரவி என்பவர் தகராறில் ஈடுபட்டார். அப்போது, தேவி, மற்றும் அவரது கணவர் சங்கர், தேவியின் சகோதரி லட்சுமி, அவரது கணவர் சவாரியா ஆகியோர் ரவியை உருட்டு கட்டையால் தாக்கியதாகவும், சம்பவ இடத்திலேயே ரவி உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில்,, துணை நடிகை தேவி உள்ளிட்ட நான்கு பேர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ரவியுடன் தவறானன உறவை தேவி துண்டித்த நிலையில், நேற்று இரவு தேவியை சந்திக்க வந்தபோது தகராறில் ஈடுபட்டதால் தாக்கியதாகவும், இதில் அவர் உயிர் இழந்ததும் தெரியவந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்