மும்பை:
இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த நடிகர் குஷால் இனன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்த நடிகர் குஷால், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வந்தார். இவர் ஐரோப்பாவை சேர்ந்த ஆட்ரி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 வயதான கியான் என்ற சிறுவன் உள்ளான்.
இந்நிலையில் நேற்று இரவு அவர் தன் வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கினார். தகவலறிந்து விரைந்த போலீசார் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைபற்றியுள்ளனர். குஷால் கடைசியாக தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.