சென்னை:
தங்கச்தமிழ்ச்செல்வனை நீக்க எனக்கு தயக்கமில்லை என அமமுகவின் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனை பற்றி தங்கத்தமிழ்செல்வன் அவதூறாக பேசியதாக நேற்று ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, இன்று காலை தேனி மாவட்ட நிர்வாகிகள் இது சம்பந்தமாக டிடிவி தினகரனை சந்தித்து பேசினர்.
ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தங்கத்தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எல்லாம் எடுக்க முடியாது. என்னை பார்த்தால் பொட்டி பாம்பாய் அடங்கிவிடுவார். இதுசம்பந்தமாக தங்கத்தமிழ்செல்வனை எச்சரித்தேன். தங்கத்தமிழ்செல்வன் என்னை நீக்குங்கள் என்று தெரிவித்துவருகிறார். நீக்க எனக்கு தயக்கமில்லை என அவர் தெரிவித்தார்.
ஊடகங்களில் வாய்க்கு வந்தபடி பேசிவருவதாகவும், அவரின் செயல்பாடுகள் சரியில்லை என நிர்வாகிகள் புகார் தெரிவித்துவந்தனர். ஜூலை முதல் வாரத்தில் நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.