என் கடவுளான டிரம்பை சந்திக்க வேண்டும் – சிலை வைத்து விரதமிருந்து வழிபடும் தீவிர ரசிகர் கோரிக்கை

என் கடவுளான டிரம்பை சந்திக்க வேண்டும் – சிலை வைத்து விரதமிருந்து வழிபடும் தீவிர ரசிகர் கோரிக்கை

அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை வருகிற 24-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் திறந்து வைக்க உள்ளார். இதற்காக இந்தியா வரவுள்ள டிரம்பிற்காக மத்திய அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

இது ஒருபுறம் இருக்க டிரம்ப்பின் தீவிர ரசிகர் ஒருவர் தான் டிரம்ப்பை சந்திக்க வேண்டும் என மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஜங்கனோன் ( Jangaon ) நகரத்தை சேர்ந்தவர் புஷா கிருஷ்ணா. இவர் டிரம்ப்பின் தீவிர ரசிகர். இவர் டிரம்ப்பிற்க்காக 6 அடி உயரத்தில் சிலை அமைத்து தினமும் பால் அபிஷேகம், பூஜை செய்து வாழிபாடு நடத்தி வருகின்றார்.

இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்த அவர், டிரம்ப் கடவுள் போன்றவர். அவருக்கு சிலை வைக்க எனக்கு ஒரு மாதம் ஆனது. நான் டிரம்ப் நீண்ட காலம் வாழ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து வருகின்றேன். தினமும் வேலையை துவங்கும் முன் டிரம்ப் படத்திற்கு பூஜை செய்து அவரை வழிபட்டு தான் எனது வேலையை தொடங்குவேன்.

இந்தியா – அமெரிக்க உறவு பலமாக இருக்க வேண்டும் என பூஜை செய்து வருகின்றேன். டிரம்பை நான் சந்திக்க வேண்டும். மத்திய அரசு அதற்கு வழிவகை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

இது குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பதில் அளித்த கிருஷ்ணாவின் நண்பர் ரமேஷ் ரெட்டி, கிருஷ்ணாவை அனைவரும் டிரம்ப் கிருஷ்ணா என்றே அழைப்போம். அவரது வீட்டை கூட டிரம்ப் வீடு என்று தான் கிராம மக்கள் கூறுகின்றார்கள். டிரம்ப்பின் மிக தீவிர ரசிகர் அவர் என கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்