திருச்சி:
திருச்சியில் லலிதா ஜீவல்லர்ஸ் நகை கடையில் சுவற்றில் துளையிட்டு சுமார் 50 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடித்துள்ளனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரி நகைக் கடை உள்ளது.
நேற்று இரவு வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
இந்த கடையில் 6 வாட்ச்மேன்கள் பணியாற்றி வருகின்றனர்.
இரவு நேரங்களிலும் அது போன்றுதான் பணியில் இருந்துள்ளனர்.
ஆனால் காலையில் ஊழியர்கள் கடையை திறந்து பார்த்தபோது நகைகள் கொள்ளை போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
முதல் தளத்தில் உள்ள நகைகள் மட்டும் கொள்ளை போனது.
இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருச்சி மாநகர கமிஷனர் அமல்ராஜ் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவிற்கு சுவற்றில் துளையிட்டுள்ளனர். சுமார் 50 கோடி அளவிற்கு கொள்ளை போயுள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.