திருச்சி:
கோயில் திருவிழாவில் 30 குடும்பங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அருகே உள்ள மணிகண்டம் அரவாக்குடி கிராமத்தில், மாரியம்மன் கோயில் திருவிழாவில் 30 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தங்களை கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவை அளித்தனர்.