திருச்சி:
திருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.13 நகைகளை பெங்களூருவில் மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 2ம் தேதி அதிகாலை திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், திருவாரூர் அருகே வாகன சோதனையின் போது மணிகண்டன் மற்றும் முருகன் ஆகியோர் சிக்கினர்.
இதனைத்தொடர்ந்து, சுரேஷ் என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தான். பின்னர் கணேசன் எனவரும் சிக்கினார்.
இந்நிலையில், திருச்சி நகைக்கடையில் கொள்ளை போன ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை பெங்களூருவில் போலீசார் மீட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை சரி பார்த்து வரும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.