திருச்சி அருகேயுள்ள திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவிலில் தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி அருகே திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் அன்னதானக் கூடம் அருகே பூங்கா ஒன்று அமைநதுள்ளது.
இந்தப் பூங்காவில் சுத்தம் செய்யும் பணியில் புதனன்று ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 505 தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தங்கப் புதையல் கண்டெடுக்கப்பட்ட இடம்
தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து தங்கத்தை பத்திரமாக கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.
தற்போது வருவாய்த் துறையினர் இதுகுறித்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.