புதுடெல்லி:
உச்ச நீதிமன்றத்தின் 100 முக்கிய தீர்ப்புகளின் நகல்கள் 9 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டன. இதில் தமிழ் மொழி இடம்பெறவில்லை.
உச்சநீதிமன்ற கூடுதல் கட்டட திறப்பு விழாவில், உச்ச நீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்புகளின் நகல்களை 100 மொழிகளில் மொழிபெயர்த்துள்ளதை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே வழங்கினார்.
நீதிபதி பாப்டே வழங்கிய நகல்கள் பட்டியலில் தமிழ் மொழி இடம்பெறவில்லை. தெலுங்கு, ஹிந்தி, ஒடியா, மராட்டி, அசாமி, கன்னடா உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.