பேருந்து போக்குவரத்து இல்லாத மாவட்டங்கள்

பேருந்து போக்குவரத்து இல்லாத மாவட்டங்கள்

தமிழகத்தில் மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பொது போக்குவரத்தை நடைமுறைப்படுத்த மாநிலம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர பிற இடங்களில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் 50 சதவீதம் பொது போக்குவரத்தை இயக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களுக்கான போக்குவரத்துக்களுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்