தண்டவாளத்தில் பை..! ரயிலை நிறுத்திய போதை வாலிபர்..!

தண்டவாளத்தில் பை..! ரயிலை நிறுத்திய போதை வாலிபர்..!

மானாமதுரை:

போதையில் பைக்கை தண்டவாளத்தில் பார்க் செய்து ரயிலை நிறுத்தியுள்ளார் வாலிபர் ஒருவர்.

மதுரையிலிருந்து ரமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயில் லாடனேந்தல் பாலத்தின் அடியில் செல்லும்போது, தண்டவாளத்தில் பைக்கைகுடன் ஒருவர் அமர்ந்திருந்தார். இதனை கண்ட ரயில் ஓட்டுநர் உடனே ரயிலை நிறுத்தினார்.

உடனடியாக ரயில் பயணிகள் இறங்கி வந்து அந்த வாலிபரை அகற்றினர். அரை மணிநேரம் தாமதத்திற்கு பிறகு ரயில் புறப்பட்டு சென்றது.

இதுகுறித்து விசாரணை நடத்திய மானாமதுரை ரயில்வே போலீசார், மானாமதுரை அருகே உள்ள ஏனாதி செங்கோட்டையை சேர்ந்த கார்மேகம் என்பவரின் மகன் சண்முகவேல் என்பது தெரியவந்தது.

இவர் சில நாட்களாக உடல்நலமின்றியும், மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியில் வந்துள்ளார். அப்போது மது போதையில் ரயிலை மறித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்