புதுடெல்லி:
ஓடும் ரயிலில் மசாஜ் சேவை அறிவிப்பை மேற்கு ரயில்வே வாபஸ் பெற்றுள்ளது.
மேற்கு ரயில்வேயின் ராட்லம் மண்டலம் சார்பில் மசாஜ் குறித்த பரிந்துறை ஒன்று வழங்கப்பட்டது. அதில் மத்திய பிரதேசத்தின் இந்தூரிலிருந்து புறப்படும் 39 எக்ஸ்பிரஸ் ரயில்களில் மசாஜ் சேவையை அறிமுகப்படுத்தலாம் எனவும், ரூ.100 கட்டமாக வசூலிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஓடும் ரயிலில், 100 ரூபாய்க்கு மசாஜ் என்ற பரிந்துரையை, மேற்கு ரயில்வே திரும்ப பெற்றுள்ளது.