ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையில் சரக்கு ரயில் தடம்புரண்டதால் ரயில்கள் தாமதமானது. ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன.
ஈரோட்டிலிருந்து ஜோலார்பேட்டைக்கு வந்த சரக்கு ரயில், மற்றொரு தடத்திற்கு மாறியபோது தடம் புரண்டது. இதில் 5 பெட்டிகளின் சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு இறங்கின. இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக ரயிலலை நிறுத்தினார்.
இதனை சரிசெய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது