2 மாதத்தில் 28 லட்சம் விதிமீறல்

  • In Chennai
  • September 10, 2019
  • 198 Views
2 மாதத்தில் 28 லட்சம் விதிமீறல்

சென்னை:

சென்னையில் 2 மாதத்தில் சுமார் 28 லட்சம் போக்குவரத்து விதிமுறை மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை அண்ணா நகரில் ஜூலை மாத இறுதியில் 58 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை இந்த கேமராக்கள் படம்பிடித்து வருகின்றன.

அதிகபட்சமாக ஒரே நாளில் சென்னை அண்ணா நகரில் 63 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை படம்பிடிக்கும் தானியங்கி கேமரா மூலம் சுமார் 28 லட்சம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

சென்னையில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மூலம் தற்போது வரை சுமார் 8,300 வாகன ஓட்டிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது போக்குவரத்து காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்