டிராபிக் போலீசாரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது.!

டிராபிக் போலீசாரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது.!

சென்னை:

புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ. கோவில் சந்திப்பு அருகே டிராபிக் தலைமை காவலர் பிரபு மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது போலீசாரை கண்டதும் மதுபோதையில் டூ வீலரில் வந்த 2 வாலிபர்கள் தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

அவர்களை பிரபு மற்றும் சக அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த 2 வாலிபர்களும் பிரபுவை தாக்கி கீழே தள்ளினர்.

இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித், முகுந்தன் என்பது தெரிந்தது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்