சென்னை:
சென்னையில் போக்குவரத்து விதி மீறயதாக டெலிவரி பாய்ஸ் மீது இதுவரை 2051 வழக்குகள் பதியப்பட்டுள்ளன என காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 1ம் தேதியன்று சென்னையில் வாகனத்தில் செல்போன் பேசியபடி சென்ற டெலிவரி பாய்ஸ் மீது ஒரே நாளில் 616 வழக்குள் பதிவுசெய்யப்பட்டன.
இதனைத்தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறியதாக, செயலி வழி உணவு வினியோகிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது இதுவரை 2051 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், தொடர் விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து செயலி வழி உணவு வினியோகிக்கும் நிறுவன மேலாளர்களுடன் காவல்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.