சென்னை:
திமுக காங்கிரஸ் உடனான கூட்டணி காலம் பதில் சொல்லும் என திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், மு.க.ஸ்டாலினை விமர்சித்து கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளிட்டபின் காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்? காங்கிரசின் அறிக்கையால், திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து காலம் தான் பதில் சொல்லும் என அவர் தெரிவித்தார்.