விஜயவாடா:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், ரயிலில் கடத்த முயன்ற 500 நட்சத்திர ஆமைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விஜயவாடாவிலிருந்து அகமதாபாத்திற்கு நவ்ஜீவன் ரயிலில் நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் குறிப்பிட்ட ரயில் வந்ததும் சோதனை செய்தனர்.
அப்போது பயணி ஒருவர் 500க்கும் மேற்பட்ட நட்சத்தி ஆமைகளை பையில் வைத்து கடத்தியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த ஆமைகள் பறிமுதல் செய்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.