3 பேருக்கு மட்டுமே நாளை தூக்கு

3 பேருக்கு மட்டுமே நாளை தூக்கு

புதுடெல்லி:

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளிகளில் 3 பேருக்கு மட்டுமே நாளை தூக்குத்தண்டனை நிறைவேற்ற இருப்பதாக திஹார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை அதிகாலை தூக்கிலிடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், நால்வரில் ஒருவரான பவன் குப்தா தனது மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதால், அவரை தூக்கிலிட முடியாது என்று திஹார் சிறை நிர்வாகம் டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குற்றம் நடக்கும் போது தனக்கு 18 வயது நிறைவடையவில்லை என்பதால், தன்னை சிறார் குற்றவாளியாக கருத வேண்டும் என்று பவன் குப்தா நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் மறு ஆய்வு செய்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்