இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் தக்காளிகளை ஆபரணங்களாக அணிவித்து பெண் ஒருவர் நூதன திருமணம் செய்துகொண்டது அனைவரையும் கவர்ந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிலோ தக்காளியின் விலை ரூ.320 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த விலையேற்றம் குறித்து பாகிஸ்தான் அரசு மீது மக்கள் கடுமையான அதிருப்பதியில் உள்ளனர்.
இந்நிலையில், தக்காளியின் விலை தங்கத்துக்கு நிகராக விலை உயர்ந்துள்ளதாக சித்தரித்து, பாகிஸ்தான் பெண் ஒருவர் திருமணத்துக்கு கை, கழுத்து, தலையில் தக்காளியால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்துள்ளார். பெற்றோர்களும் 3 கூடைகளில் தக்காளியை பரிசளித்துள்ளனர்.
A Tomato Wedding in Pakistan!pic.twitter.com/eePV7tvk08
— Tarek Fatah (@TarekFatah) November 19, 2019