சுங்கச்சாவடியில் பெண் ஊழியருக்கு குத்து!

சுங்கச்சாவடியில் பெண் ஊழியருக்கு குத்து!

குருகிராம்:

ஹரியானா மாநில சுங்கச்சாவடி ஒன்றில் பெண் ஊழியர் முகத்தில் ஓட்டுநர் ஒருவர் குத்துவிட்டு சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன.

ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் உள்ள கெர்கி டவுலா சுங்கச்சாவியில் இன்று காலை பெண் ஊழியர் ஒருவர் கட்டண வசூல் செய்துகொண்டிருந்தார். அப்போது ஓட்டுநர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அந்த பெண்ணின் முகத்தில் குத்திவிட்டு தப்பியோடினான்.

இதனையடுத்து, அந்த பெண் அழுதுகொண்டிருக்கும் போது ஊழியர்கள் சமாதானம் செய்துவைக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்திய ஓட்டுநரை குருகிராம் போலீசார் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்