1) கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருக்கிறது.
2) இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்ட தபால் ஊழியர் நியமன தேர்வு ரத்து என மத்திய அமைச்சர் கூறியதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் தங்களது வரவேற்பை தெரிவித்துள்ளனர்.
3) சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
4) மும்பை 4 மாடி கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 12 ஆக உயர்ந்துள்ளது.
5) நீட் மசோதாக்கள் 2017ம் ஆண்டுகளிலேயே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.