ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அச்சுறுத்தல் காரணமாக அமர்நாத் யாத்திரைக்கு தடை உளவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அமர்நாத் யாத்திரை செல்லும் வழியில் இந்திய ராணுவம் ஆயுதக் குவியலை கண்டுபிடித்துள்ளது. யாத்திரையை தடுத்து நிறுத்த பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டுருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், யாத்திரையை கைவிடுமாறும், பக்தர்கள் உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்பவும் உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.