சென்னை:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பானையை தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் உளளிட்ட 6 ஆயிரத்து 491 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் tnpscexams.in மற்றும் tnpscexams.net என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள், நியாயமான முறையில் நடக்கும், போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 14ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும், இதன் தேர்வு செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும் எனவும் டிஎன்பிஸ்சி தெரிவித்துள்ளது.