சென்னை:
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளை நடைபெற இருந்த ஒருங்கிணைந்த பொறியாளர் பதவிகளுக்கான தேர்வு, கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
மேலும், ஊட்டி மாவட்ட தேர்வு மையம் தவிர மற்ற மாவட்டங்களில் அறிவித்தபடி நாளை தேர்வு நடைபெறும் – டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.