சென்னை:
கோடை விடுமுறைக்கு பின், தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அன்று முதலே விலையில்லா பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும், இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.