சென்னை:
தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.