சென்னை:
டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போலீசாருக்கு தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
கடந்த 2ம் தேதி டெல்லியில் வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் கலவரம் ஏற்பட்டது. மேலும், தனியாக சென்ற போலீசாரை வழக்கறிஞர்கள் சிலர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தினர்.
போலீஸ் அதிகாரியை தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த டெல்லி போலீசார் ஒன்றுசேர்ந்து தனது குடும்பத்தினருடன் நீதி வேண்டி போராட்டத்தில் குதித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களால், போலீஸ் அதிகாரியைய தாக்கப்பட்டதற்கு தமிழக ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.