வாக்கு எண்ணிக்கை குறித்து இன்று மாலை ஆலோசனை!

வாக்கு எண்ணிக்கை குறித்து இன்று மாலை ஆலோசனை!

சென்னை:

நாடுமுழுவதும் 7 கட்டமாக மக்களவைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடக்கயிருக்கிறது. இதில் தமிழகத்தில் மொத்தம் மக்களவை தேர்தலுக்கான 39 தொகுதிகளிலும், சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள் தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ காணொலி காட்சி மூலம் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார்.

இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் பங்கேற்கின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்