மாவட்டந்தோறும் கண்காணிக்க டிஜிபி உத்தரவு

மாவட்டந்தோறும் கண்காணிக்க டிஜிபி உத்தரவு

சென்னை:

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, எதிர்ப்பு போராட்டங்களை கண்காணிக்க அனைத்து மாவட்ட காவல் துறைக்கும் தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து அமித்ஷா அறிவித்துள்ளார். இதனையடுத்து, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்கள், பாதுகாப்புபடை மற்றும் காவல் துறை ஆணையர்கள் தயார் நிலையில் இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அறுவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து கண்காணிக்க அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்