காங்., பேரணியில் தொண்டர் தீக்குளிக்க முயற்சி!

காங்., பேரணியில் தொண்டர் தீக்குளிக்க முயற்சி!

சென்னை:

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்ததையடுத்து, ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய உறுதியுடன் இருப்பதால், பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி தொடர்ந்து வழிநடத்தக்கோரி, சென்னை தேனாம்பேட்டையில் தமிழக காங்கிரஸ் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், திடீரென தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அவரை காங்கிரஸ் தொண்டர்கள் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர்.

இதனால், அந்த பேரணியில் தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்