புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல்காந்தி தொடர வலியுறுத்தி, தமிழக காங்கிரசார் டெல்லியில் உள்ள அவரது வீட்டு முன் போராட்டம் நடத்தினர்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல்காந்தி விருப்பம் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் நிரகாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக இருந்து வருகிறார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டு முன் தமிழ்நாடு காங்கிரசார் பதாகைகளுடன் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.