திருவள்ளூர்:
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்கு மறுப்பு தெரிவித்துள்ளதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றுள்ளார்.
மேகதாது அணையை கட்ட மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஆய்வு நடத்த கர்நாடக அரச அனுமதி கேட்டிருந்தது. இந்த அணையை கட்ட தமிழக அரசு கடும் எதிரிப்பு தெரிவித்து வந்தது.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசும்போது, மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் எதிர்ப்பை சுட்டிக்காட்டி கர்நாடகாவிற்கு அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர்கள் குழு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை வர