பணிக்கு திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்கள்

பணிக்கு திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்கள்

சென்னை:

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 7வது நாளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 15 ஆயிரம் மருத்துவர்களுக்கு நேற்று சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் பணிக்கு திரும்பாவிட்டால் காலியிடங்களாக அறிவிக்கப்படும் என தெரி0த்திருந்தது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அந்த பணியிடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு அந்த இடத்திற்கு பதிலாக புதிய மருத்துவர்களை நியமிக்க அரச நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்