நாங்குநேரி:
ஐஎஸ்ஐ முத்திரை பெற்றது போல உண்மையான இயக்கம் அதிமுக, திமுக டூப்ளிகேட் இயக்கம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று அப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய முதல்வர், நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றது. திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது? என மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஐஎஸ்ஐ முத்திரை பெற்றது போல உண்மையான இயக்கம் அதிமுக; திமுக டூப்ளிகேட் இயக்கம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.