அருண்ஜெட்லிக்கு முதல்வர் இரங்கல்

அருண்ஜெட்லிக்கு முதல்வர் இரங்கல்

சென்னை:

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மறைவு நாட்டிற்கே பேரிழப்பு என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கலில், நாட்டின் நிதியமைச்சராக இருந்த காலத்தில், மக்களின் நன்மைக்காகவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தயவர். நாடாளுமன்றத்தில் தனது கருத்துக்களை ஆழமாகவும், அறிவார்ந்த முறையிலும் பேசியவர் என தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லியின் மறைவு அவரின் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, பா.ஜ., தொண்டர்களுக்கும் நாட்டுக்கும் பேரிழப்பு என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய இரங்கலில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்