சென்னை:
திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பில், ஆனைமலையாறு திட்டம், நல்லாறு திட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் குறித்து கேரள முதல்வரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசவுள்ளார்.