சென்னை:
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது என மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங், பிரகாஷ் ஜவடேகருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது. ஜல்சக்திதுறைக்கு போதுமான அறிவுறுத்தல் வழங்கவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.