ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர்..!

ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர்..!

சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.

உடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, காமராஜ், கடம்பூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப்பணிகள் சுமார் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் 5 மாதத்தில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நிறைவுபெற்று, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

தண்ணீர் பிரச்சனை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்