சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சுஷ்மா ஸ்வராஜின் மறைவு, அவர்தம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கே பேரிழப்பாகும்.
சுஷ்மா ஸ்வராஜ் மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.